2. அருள்மிகு பாசுபதேஸ்வரர் கோயில்
இறைவன் பாசுபதேஸ்வரர்
இறைவி நல்லநாயகி
தீர்த்தம் சிவகங்கை
தல விருட்சம் மூங்கில்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருவேட்களம், தமிழ்நாடு
வழிகாட்டி சிதம்பரத்திற்கு கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

Tiruvetkalam Gopuramசிவபெருமான் அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிய தலம். அதனால் மூலவர் 'பாசுபதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். பாசுபதாஸ்திரம் ஏந்திய உற்சவரை இத்தலத்தில் தரிசிக்கலாம். வைகாசி மாதம் விசாகத்தன்று இத்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

மூலவர் 'பாசுபதேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சற்குணாம்பாள்', 'நல்லநாயகி' என்னும் திருநாமங்களுடன் சிறிய வடிவினளாகத் தரிசனம் தருகின்றாள்.

Tiruvetkalam Moolavarகோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். திருஞானசம்பந்தர் இங்கு தங்கியிருந்துதான் சிதம்பரம் சென்று நடராஜப்பெருமானை தரிசனம் செய்து வந்தார்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைத் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6.30 மணி முதல் 11.30 வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com